Wednesday, February 14, 2007

 

தீர்ப்பு என்னவாகும்?

தீர்ப்பு என்னவாகும்?
கோவை வேளான் கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற வழக்கு ஒரு வழியாய் முடிவுக்கு வந்துள்ளது. நாளை தீர்ப்பு.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா அல்லது மாணவிகள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்வார்களா?.

Labels:


 

காவிரி தீர்ப்பு - அணைத்துக்கட்சி கூட்டம்??????


 

தமிழ் நடிகர்களுக்கு உணர்வில்லையா?

நேற்று கன்னட நடிகர்கள் காவிரி ப்ரச்னைக்காக் ஊர்வலம்,போராட்டம் என்று ஒரு வழியாக்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு உணர்வில்லையா?
சோ போன்ற நியாஸ்தர்கள் தலைமையிலாவது ரஜினி போன்றவர்கள் எதிர்ப்பை தெரிவிக்க்வில்லயே ஏன்?
கருனாநிதி , ஜெயா போன்றவர்களுக்கு பாதிப்பு இருக்கும். மற்ற நடிகர்கள் என்ன மானம் கெட்டுப் போனார்களா?.

Wednesday, May 03, 2006

 

சொல்லிட்டார்யா ஜோசியரு......



இன்னும் ஒரு மாதத்தில் பாரளுமன்றத்தேர்தல் வருமாம். நாடி நட்சத்திரம்

பார்த்து சொன்னது நாட்டாம.

ராஜினாமா கடிதத்தைக்கூட ஒழுங்காக அனுப்பத்தெரியாத இவரு தேர்தல் ஜோசியன் சொல்றாருங்கோஓஓஓஓஓஓஒ.

செல்வி இன்னும் என்ன சொல்லக் காத்துருக்கோஓஓஓஒ

 

மருத்துவமனையில் பிரமோத் மகாஜன் மரணம்.


Saturday, April 29, 2006

 

அகராதியில மாத்திட்டாக ......


அர்த்தம் பாக்கலாம்னு
அகராதியை புரட்டினா

உண்மைக்கு ட்ரூதனும்

பழத்துக்கு ப்ரூட்னும்

சன்டைக்கு பைட்னும்

பார்வைக்கு சைட்னு

துணிவுக்கு ப்ரேவ்னும்

பாவிப் பயமக்கயாரையுமே கேட்காம

பணிவுண்ணா பன்னீர்செல்வம்னு போட்ருக்கான்

அதுவும் படத்தோடபோட்ருக்கான்.

 

நெஞச்ம் உண்டு நேர்மை உண்டு ஒடு ராஜா....


ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுறாங்களா....

 

கருனாநிதி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






மிருக சாதி என்று கூறி கலவரத்தைத் தூண்டுவதா?
கருனாநிதி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ புகார்.

1951 மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 125ன் படி தேர்தல் தொடர்பாக இரு இனத்தவர்களிடையே மோதலை உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றம்.
3 ஆண்டுகள் வரை இதற்கு சிறை தண்டனை விதிக்கலாம், அல்லது அபராதம் விதிக்கலாம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 8(1)ன் படி இந்த குற்றம் இழைப்பவர்கள் பதவி நீக்கன் செய்யப்படலாம்.
(மாலை மலர் செய்தியிலிருந்து)

Friday, April 28, 2006

 

இதப்படிச்சுட்டு கருத்து சொல்லுங்க


Thursday, April 27, 2006

 

தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்.... -- ஜெயலலிதா

தயாநிதி பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை. குற்றம் சாட்டப்பற்றவரோ, அந்த நிறுவனமோ இன்னும் வாய் திறக்கவில்லை. அதற்குள் ஜெ முந்திரிக்கொட்டை போல முந்திக்கொள்கிறார் என்றே நினைக்கத்தோன்றுகிறது.


அப்படிப்பார்த்தால்இதற்க்கெல்லாம் ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?

டான்சி வழக்கில்

அப்பட்டமாய் மிரட்டிய ரஷ்ய கம்பெனி(கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்) வழக்கில்

அ தி மு க வினரால் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில்

சொத்துக்குவிப்பு வழக்கில்

சிப்காட் நில வழக்கில்

மணல் திருட்டை தடுத்த அதிகாரிகள் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில்

இன்னும் ஏராளம்


இவற்றில் ஏதாவது ஒன்றில் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகினாரா.

Wednesday, April 26, 2006

 

துக்ளக் பேட்டி காணுகிறது.

வைகோ ஒரு வேளை கட்சி மாறுவார?

சோ: எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்.

வைகோ: 234 தொகுதிகளிலும்.

சோ: எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்க்றீர்கள்.

வைகோ: நம்பிக்கைதான். நம்பிக்கையால் தான் க்யுபா, வியட்னாம், லண்டன்
போன்ற நகரங்களில் தலைவர்கள் வெற்றி பெற்றார்கள்.

சோ: வர வர நீங்களும் கம்ப்யூனிஸ்ட் மாதிரியே பேசுறீங்க.

வைகோ.: இப்படி புரியாம பேசுனாலாச்சும் கூட்டத்திலிருந்து கணக்கு கேடக் மாட்டாங்க.

சோ: ஒரு வேளை அ தி மு க தோற்றுப் போனால் என்ன செய்வீர்கள்.

வைகோ: ஒரு போதும் நடக்காது. அப்படி நடந்தால் அது தயாநிதி மாறனின் சதியாகத்தான் இருக்கும்.

சோ: புலிகள் பற்றி தற்போது உங்கள் நிலை என்ன?

வைகோ: (மெதுவாக) எப்போதும் ஒரே நிலைதான். இந்த பதிலை பிரசுரிக்க வேன்டாம்.( 19 மாசம்கிறது ரொம்ப அதிக மாத்தெரியுது).

சோ: ஒரு வேளை கருனாநிதி வெற்றி பெற்று உங்களை அழைத்தால் போவீர்களா.?

வைகோ: அப்படி நடக்க்காது. ஒரு வேளை அப்படி நடந்தால் அது பாசிச வெறி பிடித்த , ஆணவக்காரி ஜெயலலிதாகுக்கு கிடைத்த அடி ( ஐயய்யோ இப்படி எசகு பிசாக் கேட்டு மாட்டி விட்டுராத சாமி ........ எடுக்கிறார் ஒட்டம்).

 

சாயுற மாதிரி தெரியுது.

10 கிலோ அரிசி இலவசம் சாத்தியமா. சாத்தியம்தான்

நிதி அமைச்சர் சிதம்பரம் மாலை மலர்க்கு அளித்த பேட்டியில்
2 ரூபாய்க்கு ஒரு கிலோ சாத்தியம்தான். ஜெயலலிதா சொல்வது போல் ரேசன் கடைகளில் 10 கிலோ இலவசம் என்பது சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியம்தான். எனினும் இது விரும்பத்தகாதது. ஏனெனில் ரேசன் வினியோகத்தில் உள்ள் ஓட்டைகளை அடைக்க முடியாது.


சிதம்பரம் லேசா சாயுற மாதிரி தெரியல?

 

வந்துரு வந்துரு வந்துரு

விஜயகாந்ந் அண்னாச்சி,

தினத்தந்தி பேப்பர் பாத்தீகளா. அரசியலப் பத்தி சிவாஜி கனேசன் சொன்னத. ரொம்ப வருத்தப்பட்ட்டுருக்காக.

நமக்கு எதுக்கு அரசியலெல்லாம். தேசத்துக்காக நம்ம செய்ய வேண்டியது இருக்கு. நீங்க பாட்டுக்கு அரசியல்னா எப்படி.

இப்பவும் ஒண்னும் கெட்டுப்போகலண்ணே. வாவஸ் வாங்கிட்டு வண்டிய எடுங்க.

நம்ம எல்ல என்ன சென்னயா இல்ல டெல்லியா. அதுக்கும் தாண்டிப் போகனுமிண்னே.

எல்லைல எதிரிக கொக்கரிச்சுட்ட்டு இருக்கான்க

பக்கத்துல பாகிஸ்தான் காரன்க பயமுறுத்திட்டுறுக்கான்க

எழவு ஏ கே 47 யை தூக்கிப்போடுட்டு புறப்படுங்கண்னே.

வாயிருக்குணனே. வசனம் பேசியே கொன்னுபுடலாம்.

உங்க வசதிக்கு தாவி அடிக்க தூண் கூட ரெடி பண்ணிபுடலாம்.

வாங்கண்னே வாங்கண்னே

வந்துருங்கண்னே வந்துருங்கண்னே

சொல்லுரதை சொல்லிப்புட்டோம்.

This page is powered by Blogger. Isn't yours?